Friday 3rd of May 2024 09:08:26 AM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கை தேசிய அணிக்கும் ஜாம்பவான்கள் அணிக்கும் இடையே கண்காட்சிப் போட்டி!

இலங்கை தேசிய அணிக்கும் ஜாம்பவான்கள் அணிக்கும் இடையே கண்காட்சிப் போட்டி!


இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கும் முன்னாள் வீரர்களை உள்ளடக்கிய ஜாம்பவான்கள் அணிக்கும் இடையே கண்காட்சிப் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ் இரு அணிகளுக்கிடையில் 20/20 போட்டி ஒன்றை நடத்த இலங்கை கிரிக்கட் சபை மற்றும் விளையாட்டு அமைச்சு தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் மே மாதம் 4ம் திகதி கண்டி, பல்லேகல சர்வதேச மைதானத்தில் போட்டி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், இந்தியாவில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு நலநிதிய கிரிக்கெட் தொடரில் இலங்கை ஜாம்பவான்கள் அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிவரை முன்னெறியிருந்த நிலையில் போராடித் தோல்வியடைந்திருந்தது.

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து வரும் நிலையில், முன்னாள் வீரர்களது சிறப்பான வெளிப்பாடு இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்நிலையில் தான் தேசிய அணி வீரர்களுக்கும் முன்னாள் வீரர்களுக்கும் கண்காட்சி போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.


Category: விளையாட்டு, புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE